இலங்கையில் LGBTQ சட்டத்தில் மாற்றங்கள் விரைவில். என ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் ஓரினச்சேர்க்கையை (LGBTQ) தண்டனைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹவார்ட் பல்கலைகழகம் ஏற்பாடு செய்த ZOOM கலந்துரையாடலின் போது கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
LGBTQ சமூகத்தினர் உரிமை தொடர்பான முதலாவது கேள்விக்கு பதிலளிப்பது என்றால் எங்களின் தற்போதைய சட்டத்தின்படி ஓரினச்சேர்க்கை என்பது இலங்கையின் தண்டனைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் அறிந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.