பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது , அவர் தங்கியிருந்த பகுதியில் அவருக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறித்து இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகம் இத்தாலிய அரசிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளது.
நாட்டின் தலைவர் ஒருவருக்கு எதிரான இவ்வாறான செயற்பாடு குறித்து விசாரணைகளை நடத்துமாறு இலங்கை தூதரகம், அமைச்சிடம் கேட்டுள்ளதாக மேலும் அறியமுடிந்தது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு முறையான விசாரணைகளை நடத்தவில்லையென தெரிவித்து இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் முன்னதாக பிரதமர் தங்கியிருந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
NEWS BY- SELVA
