NationNews

யாழ் நல்லூர் கந்தனின் தேர் திருவிழா

யாழ் பழமை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று (1) ஞாயிற்றுக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அவர்களுடன் நடைபெற்றது.


காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி,தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இந்தத் தேர் திருவிழாவை நேரில் காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் வழிபட்டனர் .

நாளைய திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!