MP. Dr. Helena Jaczek இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
மார்க்கம்-ஸ்ரோவில் (Markham—Stouffville) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றினார்.
“இலங்கை குறித்த புதிய ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதைக் காட்டும் தெளிவான அறிகுறிகள் குறித்துக் கவலை வெளியிடப்பட்டுள்ளது. “பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும், செயல்களும் மீண்டும் நிகழக்கூடிய போக்குத் தற்போது காணப்படுவதாக” இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனது மார்க்கம்-ஸ்ரோவில் தொகுதியில் உள்ள தமிழ்க்-கனேடிய சமூகத்தினரும் இதே கவலையைக் கொண்டிருக்கிறார்கள்.